For Daily Alerts
Just In
தொடரும் உயிரிழப்புகள்.. திருவண்ணாமலையில் ஆசிரமம் ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து இருவர் பலி!
திருவண்ணாமலையில் ஆசிரமம் ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
திருவண்ணாமலை: ஆசிரமம் ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள ரமணா ஆசிரம சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. ஆசிரம சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த மற்றொரு தொழிலாளி ராஜேஷுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிரிவலப்பாதை விரிவாக்க பணியின் போது அருகே இருந்த சுவர் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. நேற்று திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்தது.
இதில் பெண் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலையிலும் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Thiruvannamalai orphanage compound wall collapsed. Two dead one injured.
Story first published: Friday, December 15, 2017, 14:38 [IST]