சென்னைவாசிகளே, ப்ளீஸ் இந்த டப்ஷ்மாஷ் வீடியோவை மட்டும் பார்க்காதீங்க!
சென்னை: கனமழை பெய்து வருவது குறித்து ஒருவர் ஃபேஸ்புக்கில் டப்ஷ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சென்னை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இப்படியொரு #Dubsmash ஐ இதுவரையில் நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்...!இப்படியொரு #Dubsmash ஐ இதுவரையில் நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்...!
Posted by Rajan Nellai on Monday, November 30, 2015
சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் கவலை அடைந்துள்ளனர். கடவுளே, இந்த மழை நின்றுவிடட்டும் கொஞ்சம் வெயில் அடிக்கட்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ராஜன் நெல்லை என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் டப்ஷ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே என்ற பாடலுக்கு டப்ஷ்மாஷ் செய்துள்ளார்.
வீடியோவில் அவர் பாசமாக அன்னை என்று கை காண்பிப்பது வேறு யாரும் அல்ல நம்ம வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணனை தான். அந்த வீடியோவை பார்த்தால் பிறருக்கு வேண்டுமானால் சிரிப்பு வரலாம் ஆனால் சென்னையின் புறநகர்வாசிகளுக்கு அழுகையும், கோபமும் தான் வரும். பாவம், அவர்களின் நிலைமை அப்படி.