ரூ.50,000 கொடுத்து ஆணவ கொலை செய்ய கூலிப்படையை ஏவிய கவுசல்யாவின் தந்தை சின்னசாமி!
சங்கர் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவிலேயே ஆணவ கொலைக்கு முதல் முறையாக விதிக்கப்பட்ட தண்டனையாகும்.
Recommended Video
திருப்பூர்: சங்கர் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கவுசல்யாவின் தந்தை சங்கரை கொலை செய்ய கூலிப்படையை ஏவியதாக அரசு வழக்கறிஞர் சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
காதலர்களான கவுசல்யா மற்றும் சங்கர் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதனை ஏற்காத கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி கடந்த 2016ஆம் ஆண்டு சங்கரை கொலை செய்தனர்.
இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் சங்கர நாராயணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஆணவக் கொலை வழக்கில் இரட்டைத் தூக்கு தண்டனை வழங்கியது இதுவே முதன்முறை என அவர் கூறினார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புத் தரமால் போலீசார் சரியான விதத்தில் விசாரணையை கொண்டு சென்றதாகவும் வழக்கறிஞர் சங்கர நாராயணன் பாராட்டினார்.
50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கவுசல்யாவின் தந்தை சங்கரை கொலை செய்ய கூலிப்படையை ஏவியதாக அரசு வழக்கறிஞர் சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.