தொலையாவட்டம் பகுதியில் இப்படி ஒரு போஸ்டர்...!
கன்னியாகுமரி: ஊரெல்லாம் மது விலக்கு குறித்து ஒரே போராட்டமாக இருக்கிறது. ஆனால் மது விலக்கை எதிர்த்தும், மதுக் கடைகளை மூடுவதை எதிர்த்தும் சிலர் கிளம்பப் போகிறார்கள் என்று தெரிகிறது.
வாட்ஸ் ஆப்பில் வந்த இந்தப் படத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. வாட்ஸ் ஆப்பில் வந்துள்ள இந்தப் படத்தைப் பார்த்தால் இது கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவாட்டம் என்ற ஊரில் ஒட்டப்பட்ட போஸ்டராக உள்ளது. அதில் உள்ள வாசகம், மது விலக்குக்கு ஆதரவானவர்களை ஜெர்க் ஆக வைப்பதாக உள்ளது.
போஸ்டரில் உள்ள வாசகம் இதுதான்:
கண்டிக்கிறோம்
அரசு விதிமுறைப்படி கடந்த ஓராண்டு காலமாக தொலையாவட்டம் பகுதியில் அமைதியான முறையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடி தொலையாவட்டம் பகுதியின் வளர்ச்சியினை தடுக்க நினைக்கும் சமூக விரோதிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவண் : வியாபாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள்.
இது உண்மையான போஸ்டரா அல்லது போட்டோஷாப் போஸ்டரா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகவுள்ளது.