அடடா.. தம்பித்துரை இந்த டிவீட்டைப் பார்த்தாரான்னு தெரியலையே!
அம்மாவுக்கு அடுத்து சின்னம்மா என்பதுதானே முறை என்று கூறிய லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரையை கிண்டிலடிக்கும் டிவீட் இது.
சென்னை: லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை, தனது பதவிக்குரிய நிலையை விட்டு மாறி "அதிமுகவின் சின்னம்மா"வின் தீவிர பிரசாரகராக மாறி ரொம்ப நாளாகி விட்டது. அவரை டிவீட்டரில் ஒருவர் செமையாக கலாய்த்துள்ளார்.
தம்பித்துரை சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ லெட்டர்பேடில் "சின்னம்மா" சசிகலாதான் முதல்வராக வேண்டும். உடனடியாக அப்பதவியை அவர் ஏற்க வேண்டும் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அம்மாவுக்குப் பிறகு சின்னம்மா என்பதுதானே முறை என்றும் வியாக்கியானம் கூறியிருந்தார் தம்பித்துரை.
இந்த நிலையில் அவரை கலாய்த்துள்ளார் ரவிக்குமார் என்பவர். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள டிவீட்டில் இப்படிக் கூறப்பட்டுள்ளது.
அம்மாவிற்கு பிறகு சின்னம்மா வருவதுதானே முறை? - தம்பிதுரை MP
— பிரியமானவன்... (@nmravikumar) December 12, 2016
அப்படி நியாயமா பார்த்தா அண்ணாதுரைக்கு அப்புறம் நீதானே வந்திருக்கணும்?#whats app
இதை தம்பித்துரை படித்தாரான்னு தெரியலை!