For Quick Alerts
For Daily Alerts
Just In
காணாமல் போன தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாசம் மடத்துக்கு திரும்பினார்
காணாமல் போனதாக கூறப்பட்ட தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாசம் காஞ்சிபுரம் மடத்துக்கு இன்று திரும்பினார்.
காஞ்சிபுரம்: காணாமல் போனதாக கூறப்பட்ட காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாசம் இன்று திடீரென மடத்துக்கு திரும்பியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தொண்டை மண்டல ஆதீனத்துக்கு ரூ1,000 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இந்த மடத்தின் ஆதீனம் ஞானபிரகாசம் திடீரென காணாமல் போனார்.
ஏற்கனவே மதுரை ஆதீன மடத்தின் சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தாவின் சீடர்கள்தான் இந்த ஆதீனத்தையும் கடத்தியதாக கடந்த ஞாயிறன்று காஞ்சிபுரம் பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆதீனம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று ஆதீனம் ஞானபிரகாசம் மடத்துக்கு திரும்பியிருக்கிறார். பெங்களூரு பிடதியில் இருந்து ஆதீனம் ஞானபிரகாசம் மடத்துக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
Comments
English summary
The Thondai Mandala Aadheenam Gnanaprakasam today returned mutt in Kancheepuram.
Story first published: Tuesday, August 1, 2017, 21:09 [IST]