வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கிச் சூடு.. முதல்வர் விளக்கம்
தூத்துக்குடியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தூத்துக்குடியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17 வயது மாணவி ஒருவரும் ஆவார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டிருப்பது தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
ஸ்டெர்லைட் விவகாரம்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.
தவிர்க்க முடியாத நிலையில்
போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு கூடுதலாக காவல்துறையினர் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆலை இயங்காமல் இருக்க
ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.
தமிழக அரசு வேண்டுகோள்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.