ஜெ.பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் 60%க்கு மேல் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.. விளாசிய தினகரன்
ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் 60%க்கு மேல் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் 60%க்கு மேல் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர் என டிடிவி தினகரன் சரமாரியாக சாடியுள்ளார்.
ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரான டிடிவி தினகரன் ஆளும் அதிமுக அரசை சரமாரியாக சாடியுள்ளார். டிடிவி தினகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தனியார் பேருந்து உரிமையாளர்ளுக்கு உதவி செய்யவே பேருந்து கட்டண உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார். 7.5 கோடி மக்களை விடுத்து சட்டசபை உறுப்பினர்களை கையில் வைத்துக்கொள்ளவே எம்எல்ஏக்களுக்கு சம்பளம் உயர்வு அளிக்கப்பட்டது என்றும் தினகரன் குற்றம்சாட்டினார்.
இரட்டை இலை, கட்சி பெயரை பெற்றுவிட்டதால் தேர்தலில் வென்று விடலாம் என நினைத்தவர்களுக்கு ஆர்கேநகரில் பாடம் புகட்டப்பட்டது என்றும் டிடிவி தினகரன் சாடினார். ஆட்சியை கலைக்க வாக்களித்த ஓபிஎஸ் துணை முதல்வராகியுள்ளார் ஆனால் ஆட்சிக்காக பாடுபட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல் எம்எல்ஏக்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது ஏன்? என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் 60 %-க்கும் மேல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளனர் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.