தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதமேந்திய மத்திய கமாண்டோ படை அணிவகுப்பு, வஜ்ரா வாகனம் வரவழைப்பு!
தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதமேந்திய கமாண்டோ படை வீரர்கள் மற்றும் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.
Recommended Video
தூத்துக்குடி: அண்ணாநகரில் ஆயுதமேந்திய கமாண்டோ படை வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனமும் கொண்டுவரப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனை தடுக்க முயன்ற காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. 70க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாகனங்கள் சேதம்
இந்நிலையில் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் மூன்றாவது நாளாக இன்றும் பதற்றம் நீடிக்கிறது. இன்று காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது.
மத்திய கமாண்டோ படை
இதனால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அண்ணாநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய மத்திய கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிரடிப்படை போலீசார்
500க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசாரும் அண்ணாநகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தெரு முனைகளில் நின்றபடி அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கமாண்டோ படை அணிவகுப்பு
இதனிடையே தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் ஐஜிக்கள் வரதராஜ், சண்முகராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மத்திய கமாண்டோ படையினர் மற்றும் 500க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.
வஜ்ரா வாகனம் வரவழைப்பு
மேலும் அண்ணாநகர் பகுதியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்த வஜ்ரா வாகனமும் கொண்டுவரப்பட்டுள்ளது. அண்ணாநகர் பகுதியில் நீடிக்கும் பதற்றத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.