For Daily Alerts
Just In
பழனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை.. கடன் தொல்லையால் விபரீதம்!
பழனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்: பழனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. 40 வயதான இவருக்கு சந்திரா என்ற 35 வயது தங்கையும் வேலுச்சாமி என்ற 30 வயது தம்பியும் உள்ளனர்.
இவர்கள் கடன் பிரச்சனையில் சிக்கியிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இவர்கள் மூவரும் கடன் பிரச்சனை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி 3 பேரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்த போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கடன் நெருக்கடி கொடுத்து அவர்களை தற்கொலைக்கு தூண்டியது யார் என்றும் விசாரித்து வருகின்றனர்.
Comments
English summary
Three commit suicide in a same family by poisen in Pazhani. Due to dept problem they commit sucide it seems.
Story first published: Wednesday, January 24, 2018, 18:26 [IST]