For Quick Alerts
For Daily Alerts
Just In
தென்காசி அருகே செங்கோட்டையில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி
நெல்லை: தென்காசியை அடுத்த செங்கோட்டையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கின்றனர்.
செங்கோட்டை பேருந்து நிலையம் எதிரோ நகராட்சிக்கு சொந்தமான பழமையான வணிக வளாகம் ஒன்று உள்ளது. அதனை இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த இடிபாடுகளில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
English summary
A commerical complex building in Sengottai has collapsed killing 3 labourers, authorities said.
Story first published: Saturday, September 6, 2014, 18:13 [IST]