For Daily Alerts
Just In
தாமிரபரணியில் வெள்ளம்.. இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் அடித்து செல்லப்பட்டதால் பதற்றம்!
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் அடித்து செல்லப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் அடித்து செல்லப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருக்கும் ஓகி புயலால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.
இதனால் பாபநாசம் மற்றும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நெல்லை மாவட்டம் பனகுடியில் இருசக்கர வாகனத்தை எடுக்க சென்ற 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
கழுத்தளவு நீரில் தத்தளிக்கும் 3 பேரை மீட்கும் பணியில் பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மூன்று பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுயில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
thamirabharani river floods cyclone weather tamilnadu chennai rain cyclone ockhi புயல் தட்பவெப்பம் தமிழகம் சென்னை மழை ஆறு வெள்ளப்பெருக்கு
English summary
Three people drained in the flood with two wheelor at Thamirabharani river. Rescue team and fire service traing searching them.
Story first published: Thursday, November 30, 2017, 19:46 [IST]