For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்க்கரை நோயாளியான ஜெ.வுக்கு ஒரே நாளில் லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா.. அப்பல்லோ பட்டியலில் அம்பலம்

சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா ஆகியவை கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதா பேசிய ஆடியோ விசாரணை ஆணையத்திடம் தாக்கல்

    சென்னை: சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா ஆகியவை கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு பலனின்றி அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது.

    அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

    வக்கீல் குறுக்கு விசாரணை

    வக்கீல் குறுக்கு விசாரணை

    விசாரணை கமிஷன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அப்பல்லோ மருத்துவர்கள், சசிகலா குடும்பத்தினர், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் உள்ளிட்டோருடன் விசாரணை நடத்தி வருகின்றது. அவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

    சர்க்கரை நோயாளிக்கு ஸ்வீட்

    சர்க்கரை நோயாளிக்கு ஸ்வீட்

    இந்த நிலையில் சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள், அவ்வப்போது பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா

    லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா

    ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த உணவு பட்டியல் மூலம் இது தெரியவந்துள்ளது. 2016 நவம்பர் 22 ஆம் தேதி மதியம் லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா ஆகிய இனிப்பு பலகாரங்களை உட்கொண்டதும் தெரியவந்தது.

    வாழைப்பழம், மில்க் ஷேக்

    வாழைப்பழம், மில்க் ஷேக்

    2016 டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் ஆப்பிள், ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் மில்க் ஷேக் வகைகளை ஜெயலலிதா உட்கொண்டார் என அறிக்கையில் தகவல் கூறப்பட்டு உள்ளது.

    இனிப்புகள் - அதிர்ச்சி

    இனிப்புகள் - அதிர்ச்சி

    சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே ஒரே நாளில் மூன்று இனிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு தொடர்ந்து மில்க்ஷேக்களும் கொடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Three types of sweets given per day to Jayalalitha in the hospital. Apollo hospital documents says this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X