For Daily Alerts
Just In
திருவண்ணாமலை அருகே மண் சரிந்து 3 தொழிலாளர்கள் பரிதாப பலி
திருவண்ணாமலை அருகே மண் சரிந்து 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை: புலக்கணம் என்ற இடத்தில் மண் சரிந்து 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் புலக்கணம் என்ற இடத்தில் விவசாய நிலத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்றது. அப்போது கிணறு வெட்டுவதற்காக வெடி வைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கிணற்றில் இருந்தபடி வெடி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெப்பம் தாங்காமல் சூடேறி வெடி தானாக வெடித்தது.
அந்த அதிர்வில் மண்சரிவும் ஏற்பட்டதால் கிணற்றுக்குள் இருந்த தங்கராஜ், பரசுராமன், குமார் ஆகிய மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மூன்று பேரும் அருகில் உள்ள கெங்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கிணறு வெட்டும் போது மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Three workers lost their lives after land sliding in Thiruvannamalai.