கன்னியாகுமரியில் இடியுடன் மழை.. பெங்களூரையும் இரவு நேரத்தில் குளிர்விப்பதால் மக்கள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இடியுடன் கொட்டித் தீர்க்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் பெங்களூரிலும் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் மழை கொட்டி வருகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றதால் கடந்த ஒரு வாரமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகா அருகே வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மற்றும் வட தமிழகத்தில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலக மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், சுங்கான்கடை, புத்தேரி உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில் இடியுடன் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல் பெங்களூரிலும் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் இயல்பாக காணப்படும் வானம் இரவு நேரத்தில் கொட்டித்தீர்ப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.