For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூதாட்டியை அடித்துக் கொன்ற புலி – அரக்கோணத்தில் பரபரப்பு... புலி வேட்டையில் வனத்துறையினர்

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர், அரக்கோணத்தில் மூதாட்டி ஒருவரை புலி அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம்,அரக்கோணம் அடுத்த பழையகேசவரம் பகுதியில் புலி ஒன்று நடந்து சென்றதாக விவசாயி பூங்காவனம் 2 ஆம் தேதி மதியம் தகவல் சொன்னார். இந்ததகவல் காட்டு தீயாக பரவியது.

அப்பகுதி மக்கள் புலியை தேடினர். கால்தடம் ஒன்றை காட்டி இது புலியின் கால் தடம் என்றனர். இந்த தகவல்வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த பகுதிக்கெல்லாம் புலி வருவதற்க்கு வாய்ப்பில்லை எனச் சொல்லி அப்பகுதிக்கு வனத்துறையினர் வரவில்லையாம்.

Tiger killed an old lady in Vellore…

இந்நிலையில் நேற்றிரவு உரியூர்குப்பத்தை சேர்ந்த மூதாட்டி மாரியம்மாள் உடல் உபாதயை கழிக்க ஊருக்கு வெளியே சென்றுள்ளார் சென்றவர் திரும்பி வரவில்லை. இன்று காலை அப்பகுதி பெண்கள் காலைக்கடன் கழிக்க சென்றபோது முள்செடிப்பக்கம் மூதாட்டியின் உடல் தனியாகவும், தலை தனியாகவும் இருந்துள்ளது.

அதிர்ச்சியாகி இதுப்பற்றி அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டுக்குகொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடலை பார்த்தனர். வரி, வரியாக உடலில் காயங்கள் வேறு இருந்தது.

இது புலியின் தாக்குதல் தான் என்று முடிவுக்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத்துறையினருடன் சேர்ந்து புலியை பிடிக்க திட்டம் வகுத்து அங்கு முகாமிட்டுள்ளனர்.

English summary
A tiger killed an aged lady in Arakkonam, forest department camped with fire service there to trap the tiger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X