For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவண்ணாமலையில் புலி நடமாட்டம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல மலையும், பவுர்ணமி கிரிவலமும் பிரசித்தி பெற்றதாகும். இரவு, பகல் என எந்நேரமும் கிரிவலப்பாதையில் பக்தர்கள் வலம் வருவார்கள்.

இந்நிலையில், கிரிவலப்பாதை மலையடிவாரத்தில் நேற்று மாலை புலி நடமாட்டம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரணியை அடுத்த அடையபுலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன்கள் லட்சுமணன் (18), ராமு (18). இரட்டையர்களான இருவரும் இந்நிலையில், திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள பச்சையம்மன் கோயில் குளத்தில் நேற்று மாலை குளிக்கச் சென்றனர். அப்போது, புலி ஒன்று உருமியபடியே வந்ததை இருவரும் பார்த்தனராம்.

Tiger panic in Tiruvannamalai

மேலும் நாய் ஒன்று கொன்று கிடந்ததையும் ஊர்மக்கள் பார்த்துள்ளனர். இருப்பினும் புலி கால்தடம் எதுவும் தென்படவில்லை. இதையடுத்து வனத்துறையினர் இரவு நேரத்தில் யாரும் வெளியே வருவதையும், கிரிவலப்பாதையில் செல்வதையும் தவிர்க்கும்படி கூறியுள்ளனர்.

English summary
Tiger panic grip in Tiruvannamalai as two persons reportedly says they were saw a tiger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X