For Daily Alerts
Just In
திண்டிவனம் அருகே சாலை விபத்து... சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
திண்டிவனம் அருகே நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
திண்டிவனம்: திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
சென்னை கோவூரைச் சேர்ந்தவர்கள் அமுதா (45),ராஜேஷ் (21), புனிதா (8), விஜயன் (7). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இரு சக்கர வாகனத்தில் திண்டிவனம் அருகே உள்ள கொஞ்சுமங்கலம் சென்றுள்ளனர்.
அங்கு அலுவல்கள் முடிந்தவுடன் அதே இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திண்டிவனம் அருகே சாரம் அருகே அவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது.
இதில் பைக்கில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
A 4 belongs to Chennai Kovoor returned from Tindivanam in two wheeler were hit by some vehicle. All the 4 were died in spot.