For Daily Alerts
Just In
விஷால் விவகாரத்தில் விதிமுறை மீறல்.. தேர்தல் அதிகாரியை மாற்ற திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: விஷால் வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி, விதிமுறைகளுக்கு முரணாக நடந்துகொண்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர கூறுகையில், விஷால் வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி, விதிமுறைகளுக்கு முரணாக நடந்து கொண்டுள்ளாார். எனவே தேர்தல் நடத்தும் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும் என்றார்.
விஷால் வேட்புமனு விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியானதால் நேற்று நள்ளிரவு வரை சஸ்பென்ஸ் நீடித்தது. அதிமுக ஆதரவாளர்கள் ஒருபக்கம் என்றால் விஷால் ஆதரவாளர்கள் மறுபக்கம் தர்ணாக்களில் ஈடுபட்டு தேர்தல் கமிஷன் அலுவலக பகுதியை தர்ணாக்களால் திணறடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Tirumavalavan says, Election officer in RK Nagar office should be removed as he showng neglecting in work.
Story first published: Wednesday, December 6, 2017, 12:00 [IST]