ஜெ. படத் திறப்பு நிகழ்ச்சியை காங். புறக்கணிக்கும்: திருநாவுக்கரசர்
ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி நிச்சயம் புறக்கணிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி நிச்சயம் புறக்கணிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் படத்தை நாளை சட்டசபையில் திறந்து வைக்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்துவருகிறது. ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அவரது படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக திமுக நீதிமன்றத்தை நாளை நாட உள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா படத் திறப்பு விழாவில் திமுக பங்கேற்காது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். இதுகுறித்து திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை திறக்க கூடாது.
இதை தொடர்ந்து தமிழக அரசு நடத்தும் ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாது என்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் தெரிவித்தார். எனினும் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி ஆகியோர் படத்தை திறப்பதில் தவறில்லை என்று கூறியிருந்தனர்.இவர்களில் விஜயதாரணி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவார்.
அவருக்கு நேரம் கிடைத்து சென்னையிலி இருந்தால் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று விஜயதாரணி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.