குஷ்பு வருகைக்கு நெல்லையில் எதிர்ப்பு- காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு
நெல்லையில் குஷ்வு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
திருநெல்வேலி: நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் வருகைக்கு நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியையும்,கோஷ்டி மோதலையும் பிரிக்க முடியாது. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் எங்கும் கட்சி நிர்வாகிகள் இடையே கோஷ்டி மோதலுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.
தமிழக அரசியல் சூடு பிடித்து வரும் நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மாலை முக்கூடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றது உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக குஷ்பு நெல்லை சென்றுள்ளார்.
இதற்காக அவர் நெல்லை மாவட்டம் வரும் தகவல் முறையாக நிர்வாகிகளுக்கு தெரிவிக்கவில்லை என கூறி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு நிர்வாகிகள் பூட்டு போட்டனர்
குஷ்புவின் வருகை தொடர்பான போஸ்டரில் ஒரு சில காங்கிரஸ் நிர்வாகிகளின் பெயர் இல்லாததால் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், நெல்லையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கும் அவர்கள் பூட்டு போட்டு விட்டு சென்று விட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, காங்கிரஸ் கட்சியை அழிக்க நினைப்பவர்கள்தான் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக கூறினார். தான் கட்சியை வளர்க்க நினைப்பதாகவும் தெரிவித்தார். பாஜகவின் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.