திருப்பூரில் முதன்முறையாக பிப்ரவரி 18ல் ஜல்லிக்கட்டு... அமைச்சர் ஆலோசனை!
திருப்பூரில் முதன்முறையாக பிப்ரவரி 18ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
Recommended Video
திருப்பூர்: திருப்பூரில் வரும் 18-ம் தேதி முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்ய ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பார்வையாளர்கள் மடம் அமைக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பிப்ரவரி 18ம் தேதி முதன்முறையாக திருப்பூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை பிரமாண்டமாக நடத்துவதற்காக ஆலோசனை நடைபெற்றுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கேளரிகள் அமைக்கப்பட உள்ளன.
பங்குகொள்ளும் காளைகளின் பாதுகாப்பிற்காக 4 மொபைல் வேன்கள் 20 மருத்துவகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாடு பிடி வீரர்களுக்காக அனைத்துவித வசதிகளோடும் மருத்துவக்குழுக்கள் என அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.