For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 வயது குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரனுக்கு 10 வருடம் சிறை - திருவாரூர் கோர்ட் அதிரடி

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 2 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்குள்ள நெடுபடிகள் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி அன்று தனது வீட்டின் அருகே இருந்த 2 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.

Tiruvarur court jailed a rape case accuse 10 years

இதையடுத்து, குற்றவாளியான கூலித் தொழிலாளி செல்வராஜை கைதுசெய்த போலீசார் திருவாரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில், நேற்று தீர்ப்பளித்த நீதிபதி அன்புராஜ், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

English summary
Tiruvarur court jailed a coolie man for 10 years in the case of rape.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X