திருவாரூரில் ரத்த மாற்றும் சிகிச்சைக்கு வந்த பெண் கோமா நிலை- ரத்தத்தை மாற்றியதாக புகார்
திருவாரூரில் பிரசவத்திற்கு பின் ரத்த மாற்றும் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு ரத்ததை மாற்றிச் செலுத்தியதால் அந்த பெண் கோமாநிலைக்குச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருவாரூரில் வசித்துவருபவர் கமலா, இவருக்கு திருமணம் முடிந்து 19 ஆண்டுகளுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது.இந்த நிலையில் பிரசவத்திற்கு பின்பு அந்த பெண் அரசு மருத்துவமனையில் ரத்த மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரத்த மாற்று சிகிச்சையின் போது அந்த பெண்ணுக்கு பி-நெகட்டிவ் ரத்ததிற்குப் பதிலாக பி-பாசிட்டிவ் ரத்தம் ஏற்றப்பட்டதாகவும் , இதனால் அந்த பெண் கோமாநிலைக்குச் சென்றதாக கமலாவின் உறவினர்கள் புகார் கூறிவருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அரசு மருத்துவமனையின் டீன் கூறும்போது, கமலாவிற்கு பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு சரியான முறையிலேயே இரத்தம் ஏற்றப்பட்டது. மேலும் இதய நோய் இருப்பதால் தான் அந்த பெண் கோமாநிலைக்கு சென்றுள்ளார் என்று கூறினார்.
ரத்த பரிசோதனை செய்த நன்னிலம் அரசு மருத்துவமனையில் தவறான தகவல் அளிக்கப்பட்டதாக திருவாரூர் அரசு மருத்துவமனை புகார் கூறியுள்ளது.