தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 2வரை நடைபெறும்- சபாநாயகர்
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டம் இன்று கூடியது. பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு மேல் வாசித்து சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் பின் சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் மீதான விவாதத்தில் 3 திமுகவினருக்கு பதில் 2 பேருக்கு மட்டுமே அனுமதி என்றதால் திமுக வெளிநடப்பு செய்துள்ளதாக கூறப்பட்டது.
ஆய்வுக்குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 27 நாட்கள் நடைபெறும் என்று கூறினார். ஜூலை 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.