For Daily Alerts
Just In
சிறுவாணியில் கேரளா அணை கட்டுவதைத் தடுக்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்! #siruvani
சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயம் உள்ளது.
இதனைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் சட்டசபையில் சிறுவாணி அணை விவகாரம் தொடர்பான அரசினர் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார்.
அத்தீர்மானத்தில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கவேண்டும்; சிறுவாணி அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Comments
tamilnadu assembly tn assembly kerala siruvani resolution தமிழக சட்டசபை கேரளா சிறுவாணி அணை தீர்மானம்
English summary
Tamilnadu assembly today passed a resolution against the Kerala's Siruvani Dam.
Story first published: Friday, September 2, 2016, 13:14 [IST]