ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் பிரேம் ஆனந்த் கைது
ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக பாஜக பிரமுகர் பிரேம் ஆனந்த் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
சென்னை: ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2006-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரேம் ஆனந்த் (வயது 57) கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்- சென்னை ரயிலில் நள்ளிரவில் மர்ம நபர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அந்த சிறுமி கதறி அழுது பெற்றோரை எழுப்பியது.
ஈரோடு ரயில் நிலையத்தில் அந்த நபரை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது தாம் பாஜக பிரமுகர் என்றும் வழக்கறிஞர் என்றும் அந்த நபர் கூறியிருக்கிறார்.
அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் கோவை சிறையில் அடைத்தனர்.
பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய பிரேம் ஆனந்த், 2006-ம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர்; தென்சென்னை மாவட்ட பாஜக நிர்வாகியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.