For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று அமைச்சரவைக் கூட்டம்: விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிப்பாங்களா?

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்காக சட்டசபையை கூட்டுவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதேசமயம் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கவுள்ளது.

TN cabinet meets today

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, அதிமுக இணைப்பு, அமைச்சர் வீட்டில் ஐடி ரெய்டு உள்ளிட்ட களேபரங்களுக்கு இடையில் இன்று கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்காக சட்டசபையை கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்படும்.

அதே வேளையில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், தமிழகம் முழுவதும் எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பது, மின்சார தடை, நிலங்கள் பத்திர பதிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளது.

அதிமுக இணைப்பு குறித்து குறித்து இரு அணிகளின் தலைவர்களும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுவதற்காக கூறப்பட்டாலும் பல்வேறு இடையூறுகள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

English summary
Amid various problems faced in TN, today cabinet ministers meeting will held. Farmers, water crisis problems may be discussed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X