பட்ஜெட் போடத் தயாராகிறது எடப்பாடி அரசு.. நாளை கேபினட் மீட்டிங்!
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
சென்னை: எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடக்க உள்ளது. மாலை 4.30 மணியளவில் நடக்க உள்ள இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழக சட்டசபையில் விரைவில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இது தொடர்பான விவாதிக்கவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சில திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாகவும் நாளை நடக்க உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்ற தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றப் பின்னர் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பதாலும், விரைவில் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதாலும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
நாளை நடக்க உள்ள கூட்டத்திற்கு பின்னரே என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது தெரியவரும்.