தமிழகத்தில் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்
சென்னை: தைத் திருநாளின் 2-ம் நாளான இன்று உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கலைத் தொடர்ந்து வருவது மாட்டுப் பொங்கல். இந்த நாளில் உழவர் நண்பர்களான மாடுகள் தெய்வமாக வணங்கப்படும்.
மாடுகளுக்கு மரியாதை
மாட்டுப் பொங்கலையொட்டி உழவனின் நண்பனாக இருந்து உழைக்கும் மாடுகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் வைத்து, மலர் மாலை அணிவித்து, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து விவசாயிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பொங்கல் பொங்கி..
பின்னர் மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் பொங்கி, மாட்டை கடவுளாக மதித்து விவசாயிகள் வழிபடுவர்.
மாடுகளுக்கு உணவு அளித்து,..
மாடுகளுக்கு உண்வு அளித்து, விவசாயிகளும், உற்றார் உறவினர்களும் உண்டு மகிழ்வர்.
ஜல்லிக் கட்டுகள்
மாட்டுப் பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிகட்டு நிகழ்ச்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும்.