For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரும் பரபரப்பு.. தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா பரிந்துரை!

புதுவையில் தங்கியுள்ள 19 எம்எல்ஏ-க்களின் பதவிகளும் பறிப்பதற்காக சபாநாயகர் தனபாலிடம் தலைமைக் கொறடா ராஜேந்திரன் மனு அளித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை : கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு வரும் 19 எம்எல்ஏ-க்களின் பதவிகளும் பறிப்பதற்காக சபாநாயகர் தனபாலிடம் தலைமைக் கொறடா ராஜேந்திரன் மனு அளித்துள்ளார்.

அதிமுக இணைப்புக்கு பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி 19 எம்எல்ஏ-க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு கொடுத்தனர்.

TN chief whip Rajendran recommends action against 19 MLAs

இதைத் தொடர்ந்து அவர்கள் 19 பேரும் புதுவையில் தங்கியுள்ளனர். மேலும் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று இந்த அணியினர் கோரி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கட்சி தலைமைக்கு எதிராக 19 பேரும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். தலைமை கொறடா என்ற முறையில் என்னிடம் தகவல் தெரிவிக்காமல் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது.

எனவே கட்சிக்கு எதிராக செயல்பட்ட 19 எம்எல்ஏ-க்களின் பதவிகளையும் பறிக்க சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளேன் என்றார் அவர்.

English summary
TN chief whip Rajendran recommends action against 19 MLAs who withdrew support to CM
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X