For Daily Alerts
Just In
டெல்லியில் ஜூன் 16-ல் நிதி ஆயோக் மாநாடு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
டெல்லியில் ஜூன் 16ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் மாநாட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள உள்ளார்.
சென்னை : டெல்லியில் ஜூன் 16ம் தேதி நிதி ஆயோக் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளார்.
வருகிற ஜூன் 16ம் தேதி டெல்லியில் மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 15ம் தேதி டெல்லி செல்ல உள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி, நேரம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை, அடுத்து மத்திய அரசு ஆணையத்தை அமைத்தது.
அதற்கு நேரில் நன்றி சொல்வதற்காக பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இந்த நிதி ஆயோக் கூட்டத்தில், மத்திய அரசின் புதிய செயல் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
Comments
cauvery niti aayog meeting edappadi palanisamy conference காவிரி நிதி ஆயோக் மாநாடு முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி
English summary
TN CM Edappadi Palanisamy to attend NITI Aayog meeting at Delhi. NITI Aayong meeting for CMs will be held on June 16th at Delhi.
Story first published: Tuesday, June 5, 2018, 14:31 [IST]