For Quick Alerts
For Daily Alerts
Just In
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.... நீதி விசாரணை நடைபெறும்.... முதல்வர் உத்தரவு!
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Comments
tuticorin sterlite protest police firing chief minister edappadi palanisamy jupiter தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் போலீஸ் துப்பாக்கிச் சூடு நீதி விசாரணை முதல்வர்
English summary
TN chief minister Edapadi palanisamy orders judicial enquiry on tuticorin police firing.
Story first published: Tuesday, May 22, 2018, 19:41 [IST]