முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண் புரை அறுவை சிகிச்சை.. ஓய்வு எடுக்க அறிவுரை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடந்த சில நாட்களாக கண்களில் பிரச்சனை இருந்து வந்தது. கண்களில் தொடர்ந்து தூசி படிந்து வருவதால் ஏற்படும் பிரச்சனையான கண் புரை பிரச்சனை அவருக்கு ஏற்பட்டு இருந்தது.
இதற்காக சிகிச்சை பெற அவர் நேற்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று காலை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த சிகிச்சை தற்போது வெற்றிகரமாக முடிக்கப்பட்டு முதல்வர் நலமுடன் வீடு திரும்பி உள்ளார். இந்த சிகிச்சை அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மேற்பார்வையில் செய்யப்பட்டது
இந்த நிலையில் முதல்வர் 2 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். 2 நாட்களுக்கு பின் மீண்டும் முதல்வர் பணிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.