தேர்தல் வெற்றி.. மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார் எடப்பாடி!
சென்னை: உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் தேர்தல் வெற்றிக்காக, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
இதில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 324 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அறுதிப் பெறும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. இதேபோல, உத்தராகண்ட் மாநிலத்திலும் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.