பிரம்மாண்டமான முறையில் வெற்றி பெற்று தென்னிந்தியாவிற்குள் நுழையும் பாஜகவுக்கு வாழ்த்துகள்: ஓ.பி.எஸ்
கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் மோடி, அமித்ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : கர்நாடகத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மோடி மற்றும் அமித்ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகித்தது. தற்போது பாஜக அதிக முன்னிலை பெற்று மற்ற கட்சிகளை விட முன்னணியில் உள்ளது. எனவே, பாஜக தொண்டர்கள் வெற்றியினை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றிருப்பதற்கு மோடி மற்றும் அமித்ஷாவிற்கு வாழ்த்துகள். பாஜக வெற்றி பெற்றுள்ளதால், காவிரியில் நல்ல முடிவு எட்டப்படும்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு நிச்சயம் செயல்படுத்தும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகள் கொடுக்கும் அழுத்தம் நல்லது. ஆனால், இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட தேவையில்லை என்றும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அமித்ஷாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியினை ஓ. பன்னீர் செல்வம் ட்விட்டரில் பதிந்துள்ளார்.
On this cheerful occasion, I wish to express my warm greetings and felicitations for the significant victory of BJP in Karnataka Assembly Elections, bellwethering a grand entry to South India. @AmitShah pic.twitter.com/rW6YphhI7S
— O Panneerselvam (@OfficeOfOPS) May 15, 2018
அதில், கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கும், பிரம்மாண்டமான முறையில் தென்னிந்தியாவில் நுழையும் பாஜகவிற்கும், அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவுக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.