For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் சிபிஐ... தமிழக முக்கிய புள்ளிக்கு குறி!

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் அதிமுக்கிய புள்ளி ஒருவருக்கு சிபிஐ குறிவைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிடியில் சிக்காதவர்களை பிடிமானத்தில் வைக்க வருமான வரித்துறை, சிபிஐ சோதனைகள் என்பது அப்பட்டமாக அரங்கேறி வருகிறது. தமிழக அரசியலையே இந்த இரண்டின் மூலமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது டெல்லி.

TN to face Next CBI Raid

இப்போது திரைமறைவில் செயல்படும் முக்கிய புள்ளி ஒருவருக்கு குறி வைத்திருக்கிறது சிபிஐ என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக வைக்கப்பட்ட பொறியில் வசமாக ஆவணங்கள் சிக்கிவிட்டனவாம்.

எந்த நேரத்திலும் சிபிஐ அந்த முக்கிய புள்ளி மீது பாயலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரத்தை நோக்கி நகருவதற்கான வியூகங்களை வகுத்து வரும் அந்த முக்கிய புள்ளியை வளைத்துவிட்டால் எந்தப் பக்கத்திலும் இருந்தும் தங்களுக்கு எதிராக சப்தமே வராது என்பதுதான் டெல்லியின் திட்டமாம்.

English summary
Delhi Sources said that CBI officials will raid in TamilNadu very soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X