விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன்... பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு!
Recommended Video
சென்னை : விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மேலும் உணவு மானியத்துக்காக ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைவாரியாக தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அறிவிப்புகளை வெளியிட்டது. 2018-19ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ. 8,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். உணவு மானியத்துக்கு ரூ. 6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடலூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். ராமநாதபுரம் குந்துக்கல்லில் ரூ. 70 கோடியில் மீன்பிடி இறங்கு தளம்
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி- நம்பியாறு இணைப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.