தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!
தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை தமிழக அரசு 4 சதவீதம் உயர்த்தியுள்ளது.
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்பட சுமார் 18 லட்சம் பேருக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தோராயமாக கூடுதல் செலவாக ரூ. 986.77 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான கூடுதல் தவணை அகவிலைப்படி மே மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
அகவிலைப்படி உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு ரூ.244 முதல் 5 ஆயிரத்து 390வரை ஊதிய உயர்வு கிடைக்கும். ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.122 முதல் 3 ஆயிரத்து 80 வரையில் ஊதிய உயர்வு கிடைக்கும்.