மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு வேலை: இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்வு!
சென்னை : மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் இருக்கும் இடஒதுக்கீட்டை தமிழக அரசு 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மாற்றத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ன்படி அரசுப் பணியிடங்களில் 4 சதவீதம் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில்: 1981ம் ஆண்டிலிருந்தே மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவற்றில் பார்வை குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்களுக்கு தலா 1 சதவீதம் பணியிடங்கள் தலா 1 சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கீடு பெற்று பயன்பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க கேட்டுக் கொண்டதன் பேரில் இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இதன்படி பார்வைகுறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோருக்கு 1 சதவீத இடஒதுக்கீடும், கை, கால் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் பாதிக்கப்பட்டோருக்கு 1 சதவீதம் என இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த 4 சதவீத இடஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள். உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதிஉதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்கும் பொருந்தும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.