முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 24 பேர் திடீர் இட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
தமிழக அரசு பட்டியலில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தற்போது பணியிட மாற்றம் அளிக்கப்பட்டுள்ளது. 24 அதிகாரிகள் இதன் மூலம் புதிய பொறுப்பில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்கான ஆணையை தமிழக அரசின் தலைமை செயலாளர் அந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
அதன்படி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.. சுனில் பாலிவால் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.அரசு பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
மதுரை ஆட்சியர் வீரராகராவ் ராமநாதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.ராமநாதபுர ஆட்சியர் நடராஜன் மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.சந்தோஷ் பாபு தொழில்நுட்பத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
உயர்கல்வித்துறை செயலாளராக மகந்த்ராம் சர்மா மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.மாற்றுத்திறனாளி நலத்துறை ஆணையராக மகேஸ்வரி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.சென்னை ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூருக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
திருவள்ளூர் ஆட்சியராக மகேஸ்வரி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.கிருஷ்ணகிரி ஆட்சியர் கதிரவன் ஈரோட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.ஈரோடு ஆட்சியர் பிரபாகரன் கிருஷ்ணகிரிக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.தொழில் துறை சிறப்பு செயலர் சண்முகம் குடிசை மாற்று வாரியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
அசோக் டாங்க்ரே குடிநீர் வடிகால் வாரியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனுக்கு ஊரக நிதி கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.சந்திரமோகன் கைவினை பொருள் மேம்பாட்டு ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.