தமிழகத்தில் 9 டி.ஐ.ஜிக்களுக்கு ஐ.ஜிக்களாக பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 9 டி.ஐ.ஜிக்களை ஐ.ஜிக்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் 9 டி.ஐ.ஜிக்களை ஐ.ஜிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தர தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
சென்னை காவல்துறை நிர்வாக ஐ.ஜியாக ஆர். தினகரன் பதவி உயர்வு பெற்றுள்ளார். வித்யா ஜெயந்த் குல்கர்னி காவல்துறை தலைமையக ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சென்னை உளவுத் துறை ஐ.ஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்படுள்ளார். கோவை சரக ஐ.ஜியாக தீபக் எம். தாமோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் காகித நிறுவன கண்காணிப்பு ஐ.ஜியாக சந்திரசேகர் பதவி உயர்வு பெற்றுள்ளார். ஓம்பிரகாஷ் மீனா சென்னை குற்றவியல் பிரிவு ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை பயிற்சிக் கல்லூரி ஐ.ஜியாக அறிவுச்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக அருண் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். தென்காசி ஏ.எஸ்.பி. ஷாஷாங் சாய் சென்னை பூக்கடை துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி ஐ.ஜியாக மஞ்சுநாதா டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐ.ஜியாக இருந்த அமரேஷ் புஜாரி மனித உரிமை ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவின் ஐ.ஜியாக இருந்த ரவி ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயந்த் முரளி தமிழ்நாடு போக்குவரத்து திட்டக் குழு ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று்ளார். மத்தியக் குற்றவியல் ஐ.ஜியாக எம்.டி. கணேஷ்மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆக, மொத்தம் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.