24 ஆண்டுகாலம் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றிய சூரப்பா!
Recommended Video
சென்னை: தமிழகத்தின் எதிர்ப்பை மீறி அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் கர்நாடகாவின் பேராசிரியர் சூரப்பா. பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் கவுரவ பேராசிரியர் சூரப்பா.
அண்ணா பல்கலை கழகத்துக்கு கர்நாடகாவின் சூரப்பாவை நியமிக்கப்பட இருப்பதாக நேற்றே செய்திகள் வெளியாகின. இதற்கு கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்துக்கான துணைவேந்தர் தேடல் குழுவுக்கு இன்றுதான் ஏப்ரல் 30-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இப்போது திடீரென சூரப்பா, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
1970-ம் ஆண்டு மைசூர் பல்கலைக் கழகத்தில் பிஎஸ்சி படிப்பையும் இந்திய அறிவியல் கழகத்தில் 1973-ம் ஆண்டு பொறியியல் படிப்பு, 1976-ல் எம்.எஸ்.சி, 1980-ல் பிஎச்டியை நிறைவு செய்தவர் சூரப்பா. 23 ஆண்டுகள் இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றினார் சூரப்பா.
2010-ம் ஆண்டு புதியதாக உருவாக்கப்பட்ட பஞ்சாப் ஐஐடி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். முன்னதாக கர்நாடகா மாநில அரசின் அறிவியல் தொழில்நுட்ப கழகத்தின் செயலாளராகவும் பணியாற்றினார் சூரப்பா.