For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொகரம் பண்டிகையையொட்டி 24ம் தேதி விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மொகரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 24ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மொகரம் பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது குறித்து திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி தலைவரும், மாவட்ட அரசு ஹாஜியும், திருச்சி மாநகர ஜமாஅத்துல் உலமா தலைவருமான அல்ஹாஜ் மௌலவி முப்தி ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பயீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

TN govt. announces holiday on oct. 24th for Muharram

கடந்த 14ம்தேதி திருச்சியிலும், சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும், மற்ற மாவட்டங்களிலும் மொகரம் மாத முதல் பிறை தென்பட்டதால் 15ம் தேதி மொகரம் மாத முதல் பிறை ஆரம்பமானது. எனவே வருகிற 24ம் தேதி மொகரம் பண்டிகை மற்றும் ஆஷூரா தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி முஸ்லீம் மக்கள் அனைவரும் ஆயுள் அதிகரிக்கவும் நம் சகோதர சமுதாய மக்களுடன் ஒற்றுமையுடனும் மத நல்லிணக்கத்துடனும் இணைந்து வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 24ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

English summary
TN government has declared holiday on october 24th ahead of Muharram festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X