காவிரி விவகாரம்: அனைத்துக்கட்சி தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லி பயணம்.. அம்மா நாளிதழில் செய்தி!
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாக அம்மா நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாக அம்மா நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் காவிரி விவகாரத்தில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கான நீரை 177.25 டிஎம்சியாக குறைத்தது. இது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி பயணம்
இதுதொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லி செல்லவுள்ளனர்.
நமது அம்மா நாளிதழில் செய்தி
தமிழக அரசு சார்பில் பிரதமரை சந்திக்க அடுத்த வாரம் நேரம் கேட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 வாரம் மட்டுமே உள்ள நிலையில் அடுத்த வாரம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த உள்ளனர்.
நேரில் வலியுறுத்த திட்டம்
தமிழக அரசு சார்பில் பிரதமரை சந்திக்க அடுத்த வாரம் நேரம் கேட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 வாரம் மட்டுமே உள்ள நிலையில் அடுத்த வாரம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த உள்ளனர்.
சித்தராமையாவுக்கு முன்
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு முன் பிரதமரை சந்திக்க வேண்டும் என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மும்முரமாக செய்து வருவதாகவும் அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.