தமிழகத்தின் அமைதி, வளம், வளர்ச்சிக்காக 5 இயக்கங்களும் 11 சிறப்பு நோக்கு பெரும் திட்டங்களும்...
சென்னை: அமைதி, வளம், வளர்ச்சி என்ற குறிக்கோள்களை அடையவும், தொலைநோக்கு திட்டம் 2023 ஆவணத்தில் வகுக்கப்பட்ட இலக்குகளை அடையவும், மாநில அளவில் 5 இயக்கங்களையும், வளர்ச்சிக்கான 11 சிறப்பு நோக்கு பெரும் திட்டங்களையும் தமிழக அரசு வடிவமைத்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலத்தில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற குறிக் கோள்களை அடையவும், தொலைநோக்கு திட்டம் 2023 ஆவணத்தில் வகுக்கப்பட்ட இலக்குகளை அடையவும், மாநில அளவில் 5 இயக்கங் களையும், வளர்ச்சிக் கான 11 சிறப்பு நோக்கு பெரும் திட்டங்களையும் இந்த அரசு வடிவமைத்துள்ளது.
இந்த 5 இயக்கங்களும் பல்வேறு துறைகள் மற்றும் நிர்வாக அமைப்புகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து உயர் லட்சிய இலக்குகளை அடையும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளன.
மாநில அளவிலான இந்த 5 இயக்கங்கள்:-
- நீர் ஆதார மேலாண்மை மற்றும் குடி மராமத்து முறைக்கு புத்துயிரூட்டும் இயக்கம்.
- குடிசைகளற்ற கிராமங்களையும், குடிசைப் பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்கிட வீட்டு வசதிக்கான மாநில இயக்கம்.
- வறுமை ஒழிப்பின் மூலம் ஏழைகளுக்குப் பொருளாதார உயர்வை வழங்குவதற்கான இயக்கம்.
- தூய்மைத் தமிழகத்திற்கான இயக்கம்
- திறன் மேம்பாட்டிற்கான இயக்கம்.
- வளர்ச்சிக்கான 11 சிறப்பு நோக்கு பெரும் திட்டங்கள்:
- வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த முதன்மைத் துறைகளின் வளர்ச்சி.
- நகர்ப்புற உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல்.
- சுற்றுலாத்துறை மேம்பாடு.
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல்.
- சாலைகள், மின்சாரம், சிறு துறைமுகங்கள், பாசனம், குடிநீர் போன்ற உட் கட் டமைப்பை மேம்படுத்த சிறப்புக் கவனம்.
- தொழில் வழித்தடம் மூலமாக முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் தொழில் தொடங்க உகந்த சூழலை மேம்படுத்துதல்.
- அனைவருக்கும் கல்வி, குறிப்பாக கல்வித் தரத்திற்கான சிறப்புக் கவனம்.
- அனைவருக்கும் சுகாதாரம்.
- சமூகப் பாதுகாப்பு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் மீது சிறப்பு கவனம்.
- நகர்ப்புறப் போக்குவரத்தினை வலுப்படுத்துதல்.
- நல்லாட்சி மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துதல்.
- மேற்காணும் நோக்கங்களையும், இலக்குகளையும் எட்டுவதற்கான அனைத்து கொள்கைகளையும் திட்டங்களையும் வடிவமைத்து செயல்படுத்த உரிய அணுகு முறைகளை 2016-2017 ஆம் ஆண்டிற்கான இந்த திருத்த வரவு-செலவுத் திட்டம் எடுத்துரைத்துள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப் பட்டுள்ளது.