1000 ரூபாய் வரையிலான பழைய பஸ் பாஸ் செல்லும் - அரசு அறிவிப்பு
சென்னை மாநகர பேருந்துகளில் ஆயிரம் ரூபாய் வரையுள்ள உள்ள பழைய பஸ் பாஸை பிப்ரவரி 15ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஆயிரம் ரூபாய் வரையுள்ள உள்ள பழைய பஸ் பாஸை பிப்ரவரி 15ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பேருந்து கட்டணம், கடந்த 2011ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 19ஆம் சனிக்கிழமை முதல் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, பிற மாவட்டங்களில் இயக்கப்படும் நகர, மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ஐந்து ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்களும், அரசியல் கட்சியினரும் கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று தமிழக அரசு பேருந்து கட்டணத்தை பைசாவில் குறைத்துள்ளது.
இந்நிலையில், ஆயிரம் ரூபாய் வரையுள்ள உள்ள பழைய பஸ் பாஸை பிப்ரவரி 15ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.