Breaking News: குட்கா ஊழல் வழக்கில் டிஜிபி ராஜேந்திரன் மீது அரசு நடவடிக்கை?
குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரும் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது,
Recommended Video
சென்னை: குட்கா ஊழல் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் டிஜிபி ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா தமிழகம் முழுவதும் தடையின்றி விற்கப்படுகிறது, சட்டவிரோத குட்கா விற்பனைக்காக அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றனர் என்பதும் புகார்.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை நீர்த்து போகச் செய்ய தமிழக அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது; ஆகையால் ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட இருக்கிறது.
உ.பி. விபத்து 13 மாணவர்கள் பலி
உத்தரப்பிரதேசத்தில் ரயில் மோதியதில் பள்ளிப் பேருந்து தூக்கி வீசப்பட்டது. இதில் 13 மாணவர்கள் பலியாகினர்.