லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பட்டை நாமம் போட்ட தமிழகம்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 25 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடும் இயக்கத்தின் தலைவர் உதயகுமார் குமரியிலும், அதே இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராயன் மற்றும் ஜேசுராஜ் ஆகியோர் தூத்துக்குடி மற்றும் நெல்லையிலும் போட்டியிட்டனர்.
இதில் குமரியில் பதிவான 9 லட்சத்து 91 ஆயிரத்து 162 வாக்குகளில் உதயகுமாருக்கு 15 ஆயிரத்து 314 வாக்குகள் தான் கிடைத்தன. மேலும் தூத்துக்குடியில் பதிவான 9 லட்சத்து 16 ஆயிரத்து 913 வாக்குகளில் புஷ்பராயனுக்கு 26 ஆயிரத்து 476 வாக்குகள் கிடைத்தன. மேலும் நெல்லையில் போட்டியிட்ட ஜேசுராஜ் வெறும் 18 ஆயிரத்து 453 வாக்குகள் தான் பெற்றார்.
அணு உலைக்கு எதிராக போராடி மக்களின் நம்பிக்கைக்குரியவர்களான அந்த 3 பேருக்கும் குறைவான அளவே வாக்குகள் கிடைத்தன. கரூரில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளார் வளையாபதி(2,440 வாக்குகள்) தன்னை எதிர்த்து போட்டியிட்ட 4 சுயேட்சை வேட்பாளர்களை விட குறைவான வாக்குகள் பெற்றார்.
தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.