For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா போலீஸ் பாதுகாப்புடன் 100 தமிழக லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டன! #cauvery

By Mathi
Google Oneindia Tamil News

சேலம்: கர்நாடகா போலீஸ் பாதுகாப்புடன் 100க்கும் மேற்பட்ட தமிழக லாரிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கு காவி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கன்னட அமைப்பினர் உச்சகட்ட வன்முறையில் இறங்கினர். ஒரே நாளில் 100க்கும் அதிகமான பேருந்துகள், லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டன.

TN lorries escorted by Karnataka police

கர்நாடகா லாரிகளைத் தேடி தேடி கன்னட அமைப்பினர் தீ வைத்து எரித்தனர். இதனால் கர்நாடகாவில் தமிழக லாரி உரிமையாளர்கள் பெரும் அச்சமடைந்தனர்.

இந்த நிலையில் இன்று தமிழக லாரிகளுக்கு கர்நாடகா போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், 100க்கும் அதிகமான தமிழக லாரிகள், கர்நாடகா போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அனைத்து லாரிகளும் வந்து சேரும் வரை பாதுகாப்பு தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

English summary
TN lorries are being escorted out of State by Karnataka police. So far 100 lorries have been safely sent out, according to TN lorry owner association sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X